சாயங்காலம் என் பணி முடித்து திரும்பும்போது என் வண்டியின் ஒலி கேட்டு ஓடி வருவாய், அந்த புன்னகை ஒன்று போதும் என் செல்லமே. காலையில் நான் பணிக்கு செல்லும்முன் வண்டியில் ஒரு ரவுண்டு போக வேண்டும் என்பாய். இது போல் பல விஷயங்கள் சொல்லலாம், ஆனால் இப்போதும் நான் என் பணிக்கு போய் வருகிறேன், ஆனால் இப்போது நீயும் உன் புன்னகையும் தற்காலிகமாக இல்லையடி
ஒவ்வொரு நாளும் எண்ணுகிறேன், எப்போது உன்னை பார்பேன் என்று... எப்போது உன் சிரிப்பை கேட்பேன் என்று...
பெண்களுக்கும் மட்டும் உரித்தானதா... தாய்மை
இதோ இந்த ஆண்மையின் தாய்மை தாகம்...
ப்ரியமுடன்,
ஒரு தந்தை.
karthik.... i never know that u r very good blogger... its very nice .....
ReplyDeleteall the best...
keep blogging....
Anna Bayangaram......
ReplyDeleteneenga eppo tamila GB ya aanenga.....